இனிமேலும் எடுக்காதீங்க.. நேரடியாக ரோஹித்திற்கு பிரஷர் போட்ட பிசிசிஐ.. ராகுல் நீக்கம்.. நடந்தது என்ன?
பெரும்பாலும் கே எல் ராகுல் ரஞ்சிக்கு திரும்புவார்.
இந்தூர்: இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுல் நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து உள்ளதாம். முக்கியமாக பிசிசிஐ இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உள்ளதாம்.
இந்தியாவில் பொதுவாக 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் கேப்டன் தலையீடு இருக்காது. தோனி கேப்டனாக இருந்தவரை 15 பேர் கொண்ட குழுவை தேர்வு செய்வதிலும் அவர்தான் முடிவுகளை எடுத்தார்.
அவர் எடுக்கும் முடிவுகள் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தோனி போன பின் இது போன்ற தேர்வுகளை கேப்டன்கள் செய்ய முடியவில்லை.

கேப்டன்
இந்த நிலையில்தான் இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று இந்தூரில் நடக்கிறது. இன்று நடக்கும் மேட்சில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ ஆகியோர் ஆடுகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக சொதப்பிய ராகுல் இன்று நீக்கப்பட்டு உள்ளார்.

டெல்லி
டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் கே. எல் ராகுல் சொதப்பி வெறும் 1 மட்டுமே எடுத்தார் . முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமாக இரண்டாவது டெஸ்ட் மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே. எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் இந்த தொடருக்கு முன்பாக கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆவரேஜ் மோசம்
கடந்த 20 வருடத்தில் இவ்வளவு குறைவான ஆவரேஜ் கொண்ட ஒப்பனர் இந்திய அணியில் இருந்ததே இல்லை. இந்த நிலையில்தான் ராகுலை நீக்குவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பிசிசிஐ ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளது. பொதுவாக 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐதான் முடிவு எடுக்கும். அதாவது தேர்வுக்குழு முடிவு எடுக்கும். ஆனால் 11 பேர் கொண்ட அணியை கேப்டன் - பயிற்சியாளர்தான் தேர்வு செய்வார்கள். இதில் பிசிசிஐ தலையிடாது. ஆனால் இந்த முறை ராகுலை நீக்குவதில் நேரடியாக பிசிசிஐ டாப் தலைகள் தலையிட்டதாக கூறப்படுகிறது.

ரோஹித் விருப்பம்
ராகுலை நீக்க ரோஹித் விரும்பவில்லை. கில்லை அணியில் எடுக்க வேண்டும் என்றால் அவரை மிடில், ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கலாம். அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் ரோஹித் நினைத்து இருக்கிறாராம். ஸ்ரீகர் பரத்தை நீக்கலாம் என்றுதான் அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே அவர் 11 பேர் கொண்ட அணி தேர்வின் போதும் பேசி இருக்கிறாராம். ஆனால் இதை கேட்டதும் மீட்டிங்கில் இருந்த பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கோபம் அடைந்து உள்ளனர். ராகுல் தொடர்ந்து சொதப்பிவிட்டார். அவரின் ஆவரேஜ் 30க்கும் கீழ் உள்ளது. இவரை எல்லாம் அணியில் எடுக்கவே கூடாது.

ரஞ்சி ஆடட்டும்
அவர் மீண்டும் ரஞ்சி ஆடட்டும். அதில் அவர் பார்மிற்கு திரும்பட்டும். பரத் இரண்டு போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவரை போய் மொத்தமாக நீக்குவது சரியாக இருக்காது என்று கூறி உள்ளனர். 11 பேர் கொண்ட அணி தேர்வில் நேரடியாக தலையிட்டு ரோஹித் சர்மாவிற்கு இவர்கள் நேரடியாக பிரஷர் போட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. நேற்று ராகுல் தொடர்பான கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில், பிளேயிங் லெவன் இறுதி செய்யப்பட்டபின் அறிவிக்கப்படும். அதற்கு முன் சொல்ல முடியாது. துணை கேப்டன் பதவி மாற்றப்படுகிறது என்பதற்காக ஒருவரை அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்று சொல்ல முடியாது.

நீக்கம்
துணை கேப்டன் நீக்கத்தை வைத்து யூகம் செய்ய முடியாது. அப்படி செய்வது தவறு. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு சூசகமாக ராகுலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருந்தது . இத கருத்தைதான் அவர் பிசிசிஐ மீட்டிங்கிலும் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் ராகுலை நீக்குவதில் பிசிசிஐ தலைகள் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்தே அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளனர். இனி டெஸ்ட் அணிக்கு ராகுல் திரும்புவது மிகவும் கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். பெரும்பாலும் கே எல் ராகுல் ரஞ்சிக்கு திரும்புவார். ரஞ்சி போட்டிகளில் அவர் கவனம் செலுத்துவார். அதன்பின் அதில் பார்மிற்கு திரும்பினால் மீண்டும் இந்திய அணிக்குள் ராகுல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு அவர் இந்திய அணிக்குள் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications