ரோட்டோர தாபாவுக்குள் புகுந்து பரோட்டா, லஸ்ஸி, ஜிலேபி சாப்பிட்ட அமைச்சர்கள்!
டெல்லி: கடும் பசி காரணமாக, சாலையோர தாபாவுக்குச் சென்ற மத்திய அமைச்சர்கள் சிலர் அங்கு ஆலு பரோட்டா, லஸ்ஸி, ஜிலேபி ஆகியவற்றை சாப்பிட்ட சுவாரஸ்ய செய்தி கசிந்துள்ளது.
ஹரியானாவில் பேட்டி பச்சாவோ அந்தோலன் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் அவர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாகவும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹெலிகாப்டரில் டெல்லி திரும்ப அமைச்சர்கள் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் கைவிடப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் கார்களில் டெல்லி கிளம்பினர்.

ஆனால் வழியில் அமைச்சர்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியுள்ளது. டெல்லி போகும் வரை காத்திருக்க முடியாது என்று யோசித்த அவர்களுக்கு கூட வந்த ஒருவர் டெல்லிக்கு அருகே நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான முர்தால் தாபாவில் சாப்பிடலாமா என்று யோசனை கூறியுள்ளார். இதை அனைத்து அமைச்சர்களும் உடனே ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சர்களின் கார்கள் தாபாவை நோக்கி விரைந்தது.
அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ரவி சங்கர் பிரசாத், நட்டா, மகாராஷ்டிர மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அங்கு வந்ததைப் பார்த்து தாபா ஊழியர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் வியப்புடன் பார்த்தனர்.
உடனடியாக தாபா உரிமையாளர் அம்ரிக் சிங்குக்கு ஊழியர்கள் போனைப் போட்டு முதலாளி உடனே வாங்க அமைச்சர்கள் வந்திருக்காங்க என்று கூறியதும் அவரும் அலறியடித்து ஓடி வந்தார். அமைச்சர்களோ, அமைதியா ரிலாக்ஸா இருங்க சாப்பிடத்தான் வந்துள்ளோம் என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அமைச்சர்கள் ஆர்டர் கொடுத்த ஆலு பரோட்டா, மீத்தி லஸ்ஸி, ஜிலேபி ஆகியவற்றை அம்ரிக் சிங்கே தனது கையால் பரிமாறினாராம்.
சரி ஏன் பிரதமர் வரவில்லை என்று அமைச்சர்களுடன் சேர்ந்து ஒரு வெட்டு வெட்டிய அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டபோது, விஷயம் தெரிந்திருந்தால் அவரும் சந்தோஷமாக வந்திருப்பார். ஆனால் அமைச்சர்களுக்கு முன்பாக பிரதமர் வேகமாக போய் விட்டதால் அவரால் வர முடியவில்லை என்றார்.
அது சரி, மோடியை முன்னால் விட்டு விட்டு இவர்கள் மட்டும் சாப்பிட்டு விட்டு இப்படி ஒரு விளக்கமாக்கும்....!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications