தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் ராஜ்ய சபாவில், வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்தனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்று காலை இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

இந்த நோட்டிஸ் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியே வந்துள்ளது. இது சட்டத்திற்கு முரணானது என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளிப்பதில் மிக முக்கியமான காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ''இனி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன். அவர் எத்தனை நாள் பதவியில் இருக்கிறாரோ அது வரை உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''அவர் மீது விசாரணை வந்து, அது நடந்து கொண்டு இருந்தாலும், அவர் பதவியைவிட்டு இறங்கும்வரை நான் உச்ச நீதிமன்றம் செல்ல மாட்டேன்'' என்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications