விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் புரட்சி வெடிக்கும்.. இவரு தலைவரு!
விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் புரட்சி வெடிக்கும என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை: விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் மகாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்துக்குள் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.
பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர் கடந்த 6 ஆம் தேதி மாண்ட்சவூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகள்
இதில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடன் தள்ளுபடி அறிவிப்பு
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மகாராஷ்டிர விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாக அம்மாநில அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

கைவிரித்த மத்திய அரசு
இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசுகள் தான் ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மகாராஷ்டிராவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.

எந்த புரட்சிக்கும் தயார்
விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் மஹாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என சிவசேனா சிவசேனா உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மேலும் பசுமை புரட்சியை மேற்கொள்ளும் விவசாயிகள், எந்த புரட்சிக்கும் தயார் என்பதை போராட்டங்கள் மூலம் உணர்த்தி வருவதாகவும் அவர் கூறினார்.

புரட்சி வெடிக்கும்
வரும், ஜூலை மாதத்துக்குள், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கெடுவிதித்தார். இல்லையெனில் மஹாராஷ்டிராவில் புரட்சி வெடிக்கும் என்றும் உத்தவ் தாக்கரே எச்சரித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications