இந்தியா- ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவுக்கு நீண்ட காலத்துக்கு யுரேனியத்தை ஆஸ்திரேலியா வழங்கும். மேலும் அந்த ஒப்பந்தத்தின்படி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா முதல் முறையாக யுரேனியம் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து டோனி அப்போட் கூறுகையில், "யுரேனியத்தை அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்தியா உறுதியளித்துள்ளது' என்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீவிரவாதத்தால் இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும் பலியாகி வரும் நிலையில், தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல், கணினி சார்ந்த பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒடுக்குவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
பாதுகாப்புக் கூட்டுறவைப் பலப்படுத்துவது, மனிதநேய உதவிகளை மேற்கொள்வது, பேரிடர் மேலாண்மை, அமைதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கடற்படைப் பயிற்சியில் இந்தியா பங்கேற்க வேண்டும் என நரேந்திர மோடியிடம் டோனி அப்போட் அழைப்பு விடுத்தார்.
மேலும், முதல் உலகப் போரின் 100ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் சார்பில் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications