For Daily Alerts
Just In
இலங்கையிடம் 2-வது போர்க் கப்பலையும் வழங்கியது இந்தியா!
கோவாவில் கட்டப்பட்ட இலங்கைக்கான 2-வது போர்க் கப்பலை இந்தியா வழங்கியது.
கோவா: இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது போர்க் கப்பல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைக்கான போர்க்கப்பல்கள் கட்டும் பணிகள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்று வந்தன. இதில் முதலாவது ஆழ்கடல் ரோந்து போர்க் கப்பல் கடந்த ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2-வது போர்க் கப்பல் நேற்று இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த போர்க் கப்பல் கையளிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் சித்ராங்கனி வகீஸ்வரா, இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரொசாரியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
Goa Shipyard Limited has delivered the second advanced offshore patrol vessel to the Sri Lankan Navy.
Story first published: Saturday, March 24, 2018, 11:04 [IST]