பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் சூப்பர் கிராமம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்தரி கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்தரி கிராமத்தில் பெண் குழந்தைகளை யாரும் பாரமாக கருதுவது இல்லை. மாறாக ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் அந்த கிராமத்தில் 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள்.
மரக்கன்றுகளை நடுவதோடு கிராமத்தினர் மற்றும் பெற்றோரின் வேலை முடிந்துவிடுவது இல்லை.

பிக்சட் டெபாசிட்
குழந்தை பிறந்த உடன் கிராமத்தினர் ரூ.21 ஆயிரமும், குழந்தையின் பெற்றோர் ரூ.10 ஆயிரமும் அளித்து அதை அந்த குழந்தையின் பெயரில் வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைக்கிறார்கள்.

ஒப்பந்தம்
தங்களின் பெண் குழந்தைக்கு நல்ல கல்வி அளிப்போம் என்றும், அந்த குழந்தை உரிய வயதை அடைந்த பிறகே திருமணம் செய்து வைப்போம் என்றும், குழந்தை பிறந்த பிறகு நட்டு வைத்த மரக்கன்றுகளை ஒழுங்காக வளர்ப்போம் என்றும் பெற்றோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

மரங்கள்
வளர்ந்து கனிகளை அளிக்கும் மரக்கன்றுகள் மட்டுமே நடப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க அவற்றுடன் கற்றாழையும் நடப்படுகிறது. அந்த கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மகள்
அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷ்யாம் சுந்தர் பாலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டார். அவரை கௌரவிக்க இந்த மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஷ்யாம் சுந்தர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

போலீஸ் வழக்கு
பிப்லாந்தரி கிராமத்தில் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தங்கள் கிராமத்தில் குற்றங்களே இல்லை என்று பெருமையாக கூறுகிறார்கள் பிப்லாந்தரி கிராமத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications