சட்டென சரிந்த போர் விமானம்.. பைலட் பரிதாபமாக உயிரிழப்பு! என்ன நடந்தது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தை இயக்கிய பைலட்கள் இருவருமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜாகுவார் பயிற்சி விமானத்தை இயக்கிய போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ராஜஸ்தானின் சுரு என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

இதில் விமானத்தை இயக்கிய பைலட்கள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் ஜாகுவார் பயிற்சி விமானத்தை இயக்கிய போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பானுடா கிராமத்தில் மதியம் 12.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெறும் 250 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இருவரும் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், இதனால் உயிரிழந்தனர். அவர்கள் தாழ்வான தூரத்தில் விமானத்தை இயக்கிய போது விபத்து நிகழ்ந்ததாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தோரின் பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தால் வேறு யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ராணுவம் உறுதி செய்துள்ளது.
வானில் பயங்கரச் சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வயல்வெளிகளில் இருந்து தீயும், புகையும் எழுந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விபத்தில் சிக்கிய விமானத்தின் அருகேயே விமானியின் உடல் மீட்கப்பட்டது. ராணுவம் உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது.
விபத்து குறித்த செய்தி பரவியதும், ரத்தன்கர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அபிஷேக் சுரானா மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கிராம மக்கள் விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை ராணுவம் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications