லடாக்கில் ராணுவ தளபதி நரவனே- படுகாயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்தார்
லே: லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி நரவனே இன்று ஆய்வு நடத்தினார். லேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நரவனே சந்தித்து ஆறுதல் கூறினார்.
லடாக்கின் கிழக்கு பகுதியான கால்வனில் கடந்த 15-ந் தேதி இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தொடர் பேச்சுவார்த்தைகள்
இதனால் இருநாடுகளிடையே போர்ச் சூழல் உருவானது. இதனிடையே இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளிலான தொடர்பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியா-சீனா- ரஷ்யா வெளியுறவு அமைச்சர்களின் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
|
எல்லையில் ராணுவ தளபதி
இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே இன்று லடாக் எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லைக்கு 2 நாட்கள் பயணமாக நரவனே சென்றார். லேவில் ராணுவ மருத்துவமனையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களை அவர் சந்தித்து பேசினார்.

ஶ்ரீநகரிலும் ஆய்வு
அத்துடன் எல்லையில் இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை விவரங்களையும் நரவனே கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ஶ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையும் நரவனே ஆய்வு செய்கிறார்.

எல்லையில் இன்றும் பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராணுவ தளபதி நரவனேயின் எல்லை பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications