ஒரு லெவலுக்கு மேல் பேச்சே கிடையாது.. வீச்சு தான்! பாக். ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தீவிர பதிலடி
ஜம்மு: இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 26 இடங்களில் ட்ரோன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு அத்துமீறல் செய்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் முதல் குஜராத் வரை பல்வேறு இடங்களில் செயற்கை மின்தடை ஏற்படுத்தப்பட்டது.
இதில் பஞ்சாபில் பிரோஸ்பூர் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் இருக்கும் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.மேலும் காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் குண்டுகளை இடைமறித்து அழித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ஆட்டம் ஓவராக இருந்ததால், தற்போது இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. ஜம்மு செக்டார் பகுதியில், இந்திய படை தற்போது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் படை தற்போது பின்வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Drones have been sighted at 26 locations along the International Border and LoC with Pakistan. These include suspected armed drones. The locations include Baramulla, Srinagar, Avantipora, Nagrota, Jammu, Ferozpur, Pathankot, Fazilka, Lalgarh Jatta, Jaisalmer, Barmer, Bhuj,…
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 9, 2025
எல்லை கட்டுப்பாட்டு பகுதி மற்றும் சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை இந்தியா தீவிர படுத்திருக்கிறது. தொடர்ந்து ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை அடுத்து வேறு வழியின்றி இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதில் பல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பல்வேறு இடங்களில் ட்ரோன் அனுப்பி பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டதால் அதனை இந்தியா தடுத்து தற்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே இந்திய எல்லையோர பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுடைய குடியிருப்பை விட்டு இன்று இரவு வெளியே வர வேண்டாம் என்று நமது நாட்டு ராணுவம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.












Click it and Unblock the Notifications