அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற இந்தியர்.. சிலிண்டர்களில் மோதி மரணம்
நியூயார்க்கில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் இந்தியர் ஒருவர் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.
டெல்லி: நியூயார்க்கில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்திற்குள் இந்தியர் ஒருவர் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து உள்ளார். இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யபட்டது போல இருப்பதாக அமெரிக்க போலீஸ் தெரிவித்து வருகிறது.
நிறைய பாதுகாப்புகளை மீறி, கார் முழுக்க கேஸ் சிலிண்டர்களுடன் ஹபீஸ் காசி என்று அந்த இந்தியர் விமான படை தளத்திற்குள் நுழைந்து இருக்கிறார். இதற்கு பின் தீவிரவாத நோக்கம் இருக்கிறதா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

யார்
51 வயது நிரம்பிய ஹபீஸ் காசி, 1993ல் அமெரிக்காவில் குடியேறியவர். சில வருடங்களில் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்துள்ளது. அதன்பின் அவர் இந்தியா வரவேயில்லை. அமெரிக்காவில் அவர் தனியார் நிறுவனம் ஒன்றிற்காக டாக்சி டிரைவராக இருக்கிறார்.

பாதுகாப்பு இல்லை
இந்த நிலையில் நேற்று காலை நியூயார்க் அருகில் இருக்கும் அமெரிக்க விமான படை தளத்திற்குள் இவர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார். அங்கு இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மீறி உள்ளே சென்றுள்ளார். காரை மிகவும் வேகமாக ஓட்டி சென்று அங்கு இருந்த பெரிய சுவர் ஒன்றில் மோதி இருக்கிறார்.

மோதிய வெடித்தது
இவரது கார் முழுக்க கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. அதேபோல் நிறைய கெமிக்கல் பாட்டில்கள் இருந்துள்ளது. இதனால் அந்த கார் சம்பவ இடத்திலேயே பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஆனாலும் அங்கு இருந்து விமானங்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விசாரணை
இந்த சம்பவம் காரணமாக ஹபீஸ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இது தீவிரவாத நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்று அமெரிக்க போலீஸ் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications