ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஆரிப் மஜீத் 'உயிரோடு' நாடு திரும்பினார்!
மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மகாராஷ்டிரா இளைஞர் ஆரிப் மஜித் உயிரோடு நாடு திரும்பியுள்ளார். அவரிடம் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத், ஷாகீன் தன்கி, பகத் ஷேக் மற்றும் அமான் ஆகிய 4 இளைஞர்கள் கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சென்றனர். பின்னர், அவர்கள் இந்தியா திரும்பவில்லை.

இந்நிலையில் காணாமல் போன 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மாயமானவர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆரிப் மஜீத் உயிரோடு இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அவரிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேசியப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள்:
- துருக்கியில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தவர் ஆரிப் மஜீத். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது மீட்கப்பட்டவர்.
- இடைவிடாது குண்டுமழைகளால் வெறுத்துப் போன மஜீத், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பிக்க முடிவு செய்தார்.
- மஜீத்துடன் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்த ஷாகீன் தன்கிதான் இந்தியாவுக்கு தொலைபேசியில் அழைத்து மஜீத் வீரமரணடைந்துவிட்டதாக கூறியவர். ஆனால் அப்போதே ஐபி அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றனர்.
- அதே நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
- இந்த இளைஞர்கள் மீட்கப்பட்டால் ஐ.எஸ். இயக்கம் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கருதப்பட்டது.
- ஆரிப் மஜீத்தைத் தொடர்ந்து இதர இளைஞர்களும் இந்தியாவுக்கு விரைவில் திரும்புவர். தற்போது மஜீத்திடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மஜீத்தைப் போல இதர இளைஞர்களுமே தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோம் என்ற கவலையில் இருக்கின்றனர்.
- ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஒரு மாதத்திலேயே தாக்கு பிடிக்க முடியாமல் நாடு திரும்பிய இவர்கள், இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றனர்.
- ஐ.எஸ். இயக்கத்தினர் வசம் இருந்ததால் அவர்களால் அவ்வளவு எளிதாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
- இவர்கள் மீது வழக்கு தொடருவதா? இல்லையா என்பது குறித்து உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- இந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications