இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இன்று இறுதி முடிவு?
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து இன்று இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது.
இலங்கையில் வரும் நவ.15ந் தேதி முதல் 17ந் தேதி வரை காமன்வெல்த் நாடுகள் மாநாடு,நடைபெறுகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான அந்நாட்டு ராணுவம் போர்க் குற்றங்களை நிகழ்த்தியதால் இம்மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று, கனடா அறிவித்துள்ளது. இதேபோல் இலங்கை மாநாட்டை கென்யாவும் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவும் இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ செய்தியாளர் இசைப்பிரியா உயிரோடு கைது செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி இன்று முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications