வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்.. சாதனை படைத்த இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இஸ்ரோ தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் 2 உள்ளிட்ட பல திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் இதுபோல செயற்கைகோள் அனுப்பும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இன்று மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவும்.
[தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்.. தொடர்ந்து அதிகரிக்கும் வேகம்.. இப்போது எங்குள்ளது?]

என்ன செயற்கைகோள்
3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இது வானிலை ஆராய்ச்சிக்கு உதவ கூடியது. உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இது பயன்படுத்தப்படும்.

கவுண்டவுன்
இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை ஏவப்படுகிறது. இன்று மாலை ஐந்து மணி 8 நிமிடத்துக்கு ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்றே தொடங்கிவிட்டது. நேற்று பிற்பகல் 2 மணி 50 நிமிடத்திற்கு தொடங்கியது. 25 மணி 38 நிமிட கவுன்ட் டவுன் முடிந்ததும் விண்ணில் ஏவப்பட்டது .

7 மாதத்திற்கு பின்
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவி இருக்கிறது. 7 மாதங்களுக்கும் பின் இப்போதுதான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.
|
வெற்றிகரமாக ஏவப்பட்டது
கஜா புயலால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் வந்தது. இந்த நிலையில் , திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைகோள் நிறுத்தப்படும், இது 10 வருட ஆய்வு பணிகளை செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications