சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுடன் நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. முதல் நாளில் சுமார் 190 இடங்களில் ரெய்டு நடந்தது. 3வது நாளான இன்றும் 135 இடங்களில் ரெய்டு நடக்கிறது.

இந்த ரெய்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு 2 அறிக்கைகளை வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரெய்டில் கிடைத்த தகவல்களை அவர்கள் முதல்கட்டமாக அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications