Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்'.. ஒருபக்கம் பாஜக.. மறுபக்கம் ஜெகன்.. பவன் முடிவால் நாயுடு ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போதவாக அறிவித்திருப்பது அம்மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி தரும் முடிவாக உள்ளது.

ஆந்திரா மாநிலத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்தது. எனவே இந்தமுறையும் அதேபோல் தான் தேர்தல் நடைபெற போகிறது. கடந்த முறை (2019) நடந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இங்கு எந்த இடத்திலுமே வெற்றி பெறவில்லை.

Jana Sena Party leader Pawan Kalyans twist on Jagan Mohan Reddy

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த சூழலில் இப்போதே ஆந்திராவில் தேர்தல் தொடர்பான வியூகங்கள் களை கட்டியுள்ளன,

அண்மையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திபாபு நாயடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக ஆந்திராவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பவன் கல்யாண் மாறி இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவை பொறுத்த வரை கடந்த முறை தெலுங்கு தேசம் மோசமாக தோற்றுப்போக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்த முறை தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பது, சந்திரபாபு நாயுடுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கிறார்கள் ஆந்திர செய்தியாளர்கள்.

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வியூகங்களை ஜெகன் எடுத்து வருகிறார். அதில் ஒன்றாகவே சந்திரபாபு நாயுடுவின் கைதும் பார்க்கப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிக்கிய இருப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகமே காரணம் என்று சொல்கிறார்கள். அதேநேரம் சட்டசபை தேர்தலில் அனுதாப அலை ஏற்பட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக மாறினாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெகன் மோகன் ரெட்டியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார். தேவைப்பட்டால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்கிற நிலையே உள்ளது.ஏனெனில் பாஜகவின் பல மசோதாக்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ஆதரவால் பல மசோதாக்கள் நிறைவேறி உள்ளன.

எனவே பவன் கல்யாண் இப்போது தெலுங்கு தேசத்துடன் இணைந்திருப்பதால், பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் ஆதரவு தருவாரா அல்லது வழக்கம் போல் வெளியில் இருந்தே ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் நேரடியாக ஜெகன் மோகன் ரெட்டி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். பாஜக உடன் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது பவன் கல்யாணின் ஜனசேனாவும் முறித்துக்கொண்டிருப்பது அந்த கட்சிக்கு தென்னிந்தியாவில் பின்னடைவை தரும் என்றே சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+