ஜெயலலிதா குற்றவாளி என முன்கூட்டியே செய்தி வெளியிட்ட கன்னட சேனல்கள்

ஜெயலலிதா கோர்ட்டுக்குள் காலை 11 மணிக்கு சென்றார். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே தீர்ப்பு வாசிக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஜெயலலிதா மீது சட்டப் பிரிவு 13 (1) இ படி குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாகவும் கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பாக தொடங்கியது.
கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் தெரிவிக்கப்பட்டது. மதியம் 2.30 மணிவரை அதிகாரப்பூர்வமாக யாருமே தீர்ப்பு குறித்து தெரிவிக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கன்னட சேனல்களில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
ஒருவேளை காவிரி உள்ளிட்ட விவகாரங்களினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செய்திகள் கசியவிடப்படுகிறதா என்ற சந்தேகத்தை அது ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கன்னட மீடியாக்கள் சொன்னபடியே தீர்ப்பு வெளியாகிவிட்டது.
கர்நாடக உளவுத்துறை போலீசார் அளித்த தகவலையடுத்து இந்த தகவலை கன்னட சேனல்கள் ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications