ரணகளத்திலும் ருசியான சாப்பாடு... சிறைக்குள்ளேயே சட்டவிரோதமாக தங்கி சசிகலாவுக்காக சமைத்த பெண்!
வாய்க்கு ருசியான சாப்பாட்டை சமைத்து தர சட்டவிரோதமாக பெண் ஒருவரை சிறையில் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்: ருசியான சாப்பாட்டை சமைத்து கொடுக்க சட்டவிரோதமாக பெண் ஒருவரை சசிகலா தன்னுடன் சிறையிலேயே தங்க வைத்திருந்ததாக புது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறைத் துறை அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறையில் உள்ள சசிகலா சிறையிலும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக சிறை அறையில் தனி சமையலறையை சிறை அதிகாரிகளின் துணைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டதாக கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா வெளிச்சம் போட்டு காட்டினார்.

விசாரணை
இந்த முறைகேடுகள் எப்போது முதல் நடைபெற்று வருகின்றன. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்ற விசாரணையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தொடங்கியுள்ளார். இந்த விசாரணையிலாவது முழு தகவல் வருமா அல்லது அப்படியே மறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.

சிறையில் சமையல்
பெங்களூர் சிறையில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் தங்கி இருந்து சசிகலாவுக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு வாய்க்கு ருசியாக வகை, வகையாக சமைத்து கொடுப்பதற்கு என்றே அந்த பெண்ணை பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தங்க வைத்ததிருந்துள்ளார்.

மர்மமாக உள்ளது
அந்த பெண் எப்போது பெங்களூர் சிறைக்குள் நுழைந்தார். இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியில் அவரால் எப்படி சிறைக்குள் வர முடிந்தது என்று உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சசிகலாவிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறை அதிகாரிகள் அவருக்கென ஒதுக்கி கொடுத்த 5 அறைகளில் ஒரு அறையில் அந்த பெண் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

3 சமையல் கலைஞர்கள்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்காக உணவு வகைகளை தயாரிக்க 3 பெண்கள் இருந்தனர். அவர்கள் ஒருவர்தான் சசிகலாவுடன் சிறையில் தங்கி இருந்து உணவு தயாரித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications