பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை 'ஏர்லிஃப்ட்' பட பாணியில் மீட்கும் ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் டெல்லி, மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானம் அங்கு தரையிறங்கியது. வெடிகுண்டுகள் வெடித்ததில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இருவர் காயம் அடைந்தனர். பயணிகள் அனைவரும் நல்லவேளையாக உயிர் பிழைத்தனர்.

இந்நிலையில் பிரஸ்ஸல்ஸில் சிக்கிய பயணிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பேருந்துகள் மூலம் புதன்கிழமை இரவு ஆம்ஸ்டர்டாமிற்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமானம் ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளை மும்பை, டெல்லி மற்றும் டொரண்டோவுக்கு அழைத்துச் செல்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூவார்க் செல்லும் பயணிகளுக்கு வேறு ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் வரும் 26ம் தேதி வரை பிரஸ்ஸல்ஸுக்கு மற்றும் பிரஸ்ஸல்ஸில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி பிரஸ்ஸல்ஸில் இருந்து மும்பை வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் பயணிகள் பயணிக்க பெல்ஜியம் அதிகாரிகளுடன் சேர்ந்து எங்கள் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்துடனும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. பிரஸ்ஸல்ஸில் இருந்த விமானம் ஆம்ஸ்டர்டாமை அடைந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெல்லி, மும்பை, டொரண்டோவுக்கு இன்று 3 விமானங்களை இயக்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி:
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த 3 தீவிரவாதிகள் வந்தனர். அதில் எல் பக்ராவுய் சகோதரர்கள் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டனர். மூன்றாவது நபர்
விமான நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications