ஜார்க்கண்ட் தேர்தல் எக்ஸிட் போல்: ஆட்சியை அமைக்கும் பாஜக! ஜேஎம்எம்- காங். கூட்டணி படுதோல்வி
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே ஏபிபி- Matrize இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக கூட்டணியே அங்கு ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நவ. 13ம் தேதி 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று 38 தொகுதிகளில் இரண்டு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வரும் சனிக்கிழமை நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்: வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இப்போது ஏபிபி மற்றும் Matrize ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 81 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தது 42 இடங்களில் வெல்ல வேண்டும்.
அதன்படி ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சீட்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 42- 47 இடங்களில் வெல்லும் என்று ஏபிபி- Matrize கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி 25-30 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் கட்சிகள் அங்கு 1- 4 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதாவது அங்கு இப்போது ஆட்சியில் உள்ள ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி Matrize எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதற்கு முன்பு கடந்த 2019ல் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி மட்டும் 30 சீட்களில் வென்று இருந்தது. காங்கிரஸ் 16 சீட்களில் வென்ற நிலையில், இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் பாஜகவால் அங்கு 25 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர ஜேவிஎம்பி கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு என்ற கட்சி 2 இடங்களிலும் வென்று இருந்தது.
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 14 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 9 இடங்களிலும் இந்தியா கூட்டணி 5 இடங்களிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications