மத்திய அரசு திட்டத்திற்கு நேரு பெயருக்கு பதில் வாஜ்பாய் பெயர்! அமைச்சரவை முடிவு..காங். எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தித்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், நகர்ப்புற புனரைப்பு திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தித்தின் பெயரை மாற்றி பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை வைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளாதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது.
மேலும் முந்தைய அரசின் பழைய குடியிருப்பு திட்டங்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது
முன்னாள் பிரதமர் நேருவின் பெயரில் உள்ள திட்டத்திற்கு வாஜ்பாயின் பெயரை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications