ஜே.என்.யூ மாணவர் கன்யாகுமார் மீது தாக்குதல்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை கமிஷன் குட்டு
டெல்லி: ஜவகர்லார் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் மீது டெல்லி கோர்ட்டில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அதை டெல்லி போலீசார் தடுக்க தவறி விட்டனர் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் அப்சல் குரு நினைவு தின நிகழ்ச்சி தொடர்பாக தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இரு தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டார். அப்போது வக்கீல்கள் சிலர் கன்னையா குமார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தில் கன்யா குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் வைத்து கன்யா குமாருக்கு மனரீதியான உளைச்சலை உருவாக்கி அவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது முன்கூட்டியே திட்டமிட்டும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்டுள்ளது. கன்யா குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் கன்யா குமார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள வாக்குமூலமானது போலீசாரால் மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாகும்.
எனவே அவருக்கு காவல்நிலையத்திலும், திகார் சிறையிலும் உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிமன்ற சம்பவத்தில் போலீசார் அலட்சியமாக நடந்துள்ளனர் என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications