அத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்... தடயமே இல்லாமல் அழிந்த கொடுமை!
Recommended Video

பெங்களூர்: அத்திப்பட்டியை போல் கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமமே அடித்து செல்லப்பட்ட அவலம் நடந்தேறியுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது. மடிகேரி நகரில் நிலச்சரிவால் ஒரு கட்டடம் உடைந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் குடகு மாவட்டம், மடிகேரி தாலுக்காவில் காண்டானாகொள்ளி என்ற கிராமமே நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இந்த கிராமம் இருந்ததற்கான ஒரு சிறு தடயம் கூட இல்லாமல் மொத்தமாக சென்றுவிட்டது.
இதை பார்க்கும் போது சிட்டிசன் படத்தில் மழை , வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தமிழக வரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே இல்லாமல் இருக்கும். அது போன்று இன்று கர்நாடக மாநில எல்லையில் கொண்டானாகொள்ளி என்ற கிராமமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications