ஜூலை 27ல் உதயமாகும் “கலாம் அறிவு சார் மையம்”- டெல்லிக்குச் செல்லும் கலாம் உடைமைகள்!
டெல்லி: டெல்லியில் அமைய உள்ள மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுசார் மையத்திற்கு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது உடைமைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஜூலை 27 இல் மேகாலயா ஷில்லாங்கில் உயிரிழந்தார். அவரது நினைவாக டெல்லியில் கலாம் அறிவுசார் மையம் அமைய உள்ளது.
இதில் வைப்பதற்காக கலாம் பயன்படுத்திய புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை வழங்கும்படி ராமேஸ்வரத்தில் உள்ள உறவினர்களிடம் டெல்லி அரசு கேட்டு கொண்டது.

சுற்றுலாத்துறையிடம் ஒப்படைப்பு:
அதன்படி நேற்று, ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் இருந்த அவரது உடைமைகள் டெல்லி மாநில சுற்றுலாதுறை அமைச்சர் கபில் மிஸ்ரா மற்றும் சுற்றுலாதுறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து:
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இறந்த பிறகு அவர் பயன்படுத்திய ஆடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை மத்திய அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

கலாம் வீட்டில் அமைச்சர் குழு:
இந்நிலையில், டெல்லியில் அப்துல்கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைத்து அதில், கலாம் பயன்படுத்திய பொருள்களை காட்சிக்கு வைக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையொட்டி கலாம் பயன்படுத்திய பொருள்களை பெறுவதற்காக டெல்லி மாநில பண்பாடு மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கபில்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் அப்துல்கலாம் வீட்டிற்கு நேற்று வந்தனர்.

பொருட்கள் ஒப்படைப்பு:
அவர்களிடம், அறிவு சார் மையத்திற்கு அப்துல்கலாமின் தொப்பி, குல்லா, துண்டு, இரண்டு கண்ணாடிகள், பெல்ட், வேட்டி, 2 கோட்டுகள், இரு டைகள், சட்டை, கம்பளித்துண்டு, சால்வை, மப்ளர் ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. இப்பொருள்களை அப்துல்கலாமின் அண்ணன் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் பேரன் சேக்சலீம் ஆகியோர் வழங்கினர்.

ஜூலை 27ல் அமைகிறது:
பின்னர் அமைச்சர் கபில் மிஷ்ரா கூறும்போது, ‘‘டெல்லியின் இதய பகுதியான சரோஜினி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே கலாம் அறிவுசார் மையத்தை நிறுவ முதல்வர் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், அவரது கோட், சூட், பேனா, கலாமுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கலாமின் சகோதரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். டெல்லியில் அமைய உள்ள அறிவுசார் மையம் கலாம் நினைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications