பெங்களூரிலிருந்து சென்னைக்கு 'புல்லட்'டில் வரலாம்.. ஜப்பான் உதவியுடன்!
பெங்களூர்: பெங்களூர் நகரிலிருந்து சென்னை, மைசூருக்கு புல்லட் ரயில்களை இயக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் இதை செயல்படுத்தவும் கர்நாடகா தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் பெங்களூர் நகரிலிருந்து சென்னை, மைசூருக்கான பயண நேரம் குறையும் என்றும், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

சீனாவுக்குப் போன ராமையா
சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார் சித்தராமையா. அங்கிருந்து திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய ரயில்வேயுடனும், ஜப்பானிய நிபுணர்களுடனும் எங்களது அதிகாரிகள் இதுதொடர்பாக பேசி வருகின்றனர்.

முதலில் சென்னை, மைசூருக்கு
முதல் கட்டமாக பெங்களூரிலிருந்து சென்னை, மைசூருக்கு புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

சீனாவில் ஜப்பான் அமைச்சருடன் பேச்சு
சீன பயணத்தின்போது, ஜப்பான் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஹகுபுன் ஷிமோனுராவுடன் நான் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினேன். நிதியுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

ஜப்பான்தான் பர்ஸ்ட்
உலகிலேயே புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜப்பான்தான். 1960களிலிருந்து அங்கு அந்த ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எனவே அவர்களது தொழில்நுட்பமே சிறந்தது.

அரை மணி நேரத்தில் மைசூர்.. ஒரு மணி நேரத்தில் சென்னை
பெங்களூர்- மைசூர் இடையிலான தூரம் 150 கிலோமீட்டர் ஆகும். இதை புல்லட் ரயிலில் அரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். அதேபோல பெங்களூர் - சென்னை தூரம் 360கிலோமீட்டர். அதை ஒரு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலான நேரத்தில் அடைந்து விடலாம்.

ஹூப்ளி, மங்களூருக்கும்
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மங்களூர், ஹூப்ளி ஆகிய நகரங்களுக்கும் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications