தனி நாடு கேட்கப் போகிறாரா 'தெலுங்கானா' கேசிஆர்.. மகள் பேச்சால் புது சர்ச்சை!
டெல்லி: தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா எம்.பியுமான கவிதாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கண்டனங்களையும் வாரிக் கொண்டுள்ளது.
காஷ்மீரும், தெலுங்கானாவும் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்ததில்லை. இவற்றை இந்திய அரசுதான் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டு இந்தியாவுடன் சேர்த்து விட்டதாகவும் கவிதா கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பியான அவர் ஒரு செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிக் கூறியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து....

ஜம்மு காஷ்மீர் - தெலுங்கானா
ஜம்மு காஷ்மீரும் சரி, தெலுங்கானாவும் சரி இரண்டுமே இந்தியாவுடன் ஒருபோதும் இருந்ததில்லை. அவை இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை. இதை நாம் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்.

எல்லைகளை மாற்றுங்கள்
எனவே நாம் இதை மனதில் கொண்டு இந்தியாவின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும். இதுதான் எதார்த்தமானது, சரியானதும் கூட என்றார் கவிதா.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
கவிதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு இது என்று அது வர்ணித்துள்ளது.

ஒருங்கிணைந்த பகுதிகள்
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது. காஷ்மீர் மக்களும் இதை உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு மாநில முதல்வரின் மகள் காஷ்மீர் குறித்து இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறது என்றார் சிங்வி.

தனி நாடு கேட்கத் திட்டமா
தெலுங்கானா தனி மாநிலத்தை கடுமையாகப் போராடி, அடம் பிடித்து, சாதித்து வாங்கியவர் சந்திரசேகர ராவ். இப்போது அவரது மகள் பேசுவதைப் பார்த்தால் ஒரு வேளை தனி நாடு கோரிக்கையை டிஆர்எஸ் கையில் எடுக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

தெலுங்கு மக்களைப் பிரித்தவர் என்ற புகார்
ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்களை தெலுங்கானா, சீமாந்திரா என்று பிரித்தவர் ராவ் என்ற குற்றச்சாட்டு தெலுங்கு மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் கவிதாவின் பேச்சை தெலுங்கு மக்கள் மீது நாட்டு மக்களின் கோபம் திரும்பக் காரணமாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications