தனி நாடு கேட்கப் போகிறாரா 'தெலுங்கானா' கேசிஆர்.. மகள் பேச்சால் புது சர்ச்சை!
டெல்லி: தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா எம்.பியுமான கவிதாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கண்டனங்களையும் வாரிக் கொண்டுள்ளது.
காஷ்மீரும், தெலுங்கானாவும் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்ததில்லை. இவற்றை இந்திய அரசுதான் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டு இந்தியாவுடன் சேர்த்து விட்டதாகவும் கவிதா கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பியான அவர் ஒரு செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிக் கூறியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து....

ஜம்மு காஷ்மீர் - தெலுங்கானா
ஜம்மு காஷ்மீரும் சரி, தெலுங்கானாவும் சரி இரண்டுமே இந்தியாவுடன் ஒருபோதும் இருந்ததில்லை. அவை இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை. இதை நாம் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்.

எல்லைகளை மாற்றுங்கள்
எனவே நாம் இதை மனதில் கொண்டு இந்தியாவின் எல்லையை மாற்றியமைக்க வேண்டும். இதுதான் எதார்த்தமானது, சரியானதும் கூட என்றார் கவிதா.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
கவிதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு இது என்று அது வர்ணித்துள்ளது.

ஒருங்கிணைந்த பகுதிகள்
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்தது. காஷ்மீர் மக்களும் இதை உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு மாநில முதல்வரின் மகள் காஷ்மீர் குறித்து இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறது என்றார் சிங்வி.

தனி நாடு கேட்கத் திட்டமா
தெலுங்கானா தனி மாநிலத்தை கடுமையாகப் போராடி, அடம் பிடித்து, சாதித்து வாங்கியவர் சந்திரசேகர ராவ். இப்போது அவரது மகள் பேசுவதைப் பார்த்தால் ஒரு வேளை தனி நாடு கோரிக்கையை டிஆர்எஸ் கையில் எடுக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

தெலுங்கு மக்களைப் பிரித்தவர் என்ற புகார்
ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்களை தெலுங்கானா, சீமாந்திரா என்று பிரித்தவர் ராவ் என்ற குற்றச்சாட்டு தெலுங்கு மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் கவிதாவின் பேச்சை தெலுங்கு மக்கள் மீது நாட்டு மக்களின் கோபம் திரும்பக் காரணமாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications