5 வருஷமா பாலியல் பலாத்காரம்… சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய மாணவிக்கு சபாஷ்.. கேரள முதல்வர் நெத்தியடி
தன்னிடம் அத்துமீறிய சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மாணவிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: தன்னிடம் அத்துமீறிய சாமியார் ஒருவரின் ஆணுறுப்பை வெட்டிய சட்டக் கல்லூரி மாணவியின் துணிச்சலை கேரள முதல்வர் பினராய் விஜயன் பாராட்டியுள்ளார்.
கேரளாவில் 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் பிறப்புறுப்பை, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துண்டித்தார். இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாது இந்தியாவையே பரபரப்பாக்கியது.
தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது மாணவி ஆணுறுப்பை வெட்டியதால், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாமியார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸார் விசாரித்து, ஸ்ரீஹரி சுவாமி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் பிறப்புறுப்பை அறுத்தேன் என பாதிக்கப்பட்ட பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

வேறுவிதமாக சாமியார்
ஆனால், தனக்கு உதவாத ஒன்று தனக்கு தேவையில்லை என்று தானே தனது பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டதாக சாமியார் வேறு மாதிரி கூறியுள்ளார். இவர் தரும் விளக்கத்தை யாரும் நம்பத் தயாராக இல்லை.

சபாஷ்
இந்நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த பெண்ணுக்கு சபாஷ் கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டிய அவர், சட்டக் கல்லூரி மாணவியின் முடிவு மிகவும் தீரமானது என்று புகழ்ந்துள்ளார்.

எச்சரிக்கை
மேலும், மாணவியின் செயல், பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கும். இனி பெண்கள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற துணிச்சலான செயலில் ஈடுபட வேண்டும் என்று கேரள முதல்வர் பெண்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications