மாட்டிறைச்சி தடை.. என்ன உத்தரவு போட்டிருக்கு மதுரை ஹைகோர்ட்.. கேட்கிறது கேரளா ஹைகோர்ட்!
மத்திய அரசின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும் என்று கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவனந்தபுரம் : இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவ்னீத் பிரசாத் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது வாதிட்ட அட்வகேட் ஜெனரல் சுதாகர பிரசாத், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும்? மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக போராடுவோர், உத்தரவு விபரத்தை சரியாக படிக்கவில்லை என்றே தெரிகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள உத்தரவின்படி, பசுவதை, மாட்டிறைச்சி உண்பது, விற்பதற்கு தடையில்லை.
அதே சமயம் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மத்திய அரசை எதிர்த்து போராடும் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications