For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்ஷணம் இல்லா.. பசியோடு உணவு கேட்கும் கேரள மலைவாழ் சிறுமி.. அதிர்ச்சி வீடியோ

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி, உணவு இன்றி தவிக்கும் இடுக்கி மலை வாழ் சிறுமி ஒருத்தி உணவு கேட்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வெள்ளத்தினால் உணவு இல்லை...பசியோடு உணவு கேட்கும் சிறுமி- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி, உணவு இன்றி தவிக்கும் இடுக்கி மலை வாழ் சிறுமி ஒருத்தி, உணவு கேட்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் மழை பெய்துள்ளது. அங்கு யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் தற்போது மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு மழை பெய்யும் வேறு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எத்தனை பேர் மரணம்

    எத்தனை பேர் மரணம்

    இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 45 ஆயிரம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இடுக்கி சிறுமி

    கேரளாவில் இடுக்கியை சேர்ந்து இந்த சிறுமியின் வீடியோ வைரலாகி உள்ளது. அங்கு மீட்பு பணி செய்ய வந்த நபரிடம் இந்த சிறுமி ''பக்ஷணம் மில்லா'' என்று மலையாளத்தில், உணவு இல்லை என்று கூறி இருக்கிறாள். இதனால், அந்த நபர் உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அந்த சிறுமியின் கண்களில் தெரியும் பசி மனதை உருக்கும் வகையில் உள்ளது.

    உதவினார்கள்

    உதவினார்கள்

    அவர்கள் சொன்னது போலவே அந்த சிறுமிக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் உணவு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். தற்போது அவர்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதி முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இடுக்கி மலை

    இடுக்கி மலை

    இடுக்கியை சுற்றியுள்ள மலைக்கிராமம் பல இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், இங்கு அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுமி இருக்கும் பகுதியை போலவே பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உணவு உடை இன்றி இருக்கிறார்கள்.

    English summary
    Kerala Flood: No food left her, a girl from Idukki made cry everyone . The 14 days rain has lashed out the whole state. The rain had totally ripped off the God's Own Country Kerala. "No food left here" she replied with a faint smile. Hunger and poverty has gripped these tribal villages of Kerala beyond imagination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X