முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம்... கேரள அரசு திடீர் முடிவு
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக , 124 பேர் கொண்ட சிறப்பு காவல்படையை அம்மாநில அரசு நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாகவும், இது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்தும் விவாதிக்க கேரள அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையில் கூடியது.
கூட்டத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது...

முல்லை பெரியாறு அணையில் தற்போது 22 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக 124 பேர் கொண்ட சிறப்பு காவல் படை அமைப்பது எனவும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிட ரூ.65 லட்சம் நிதி ஒதுக்குவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த வழக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கேரளாவின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications