தனது நிறமும் இல்லை... தந்தையின் சாயலும் இல்லை... பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது
கேரள மாநிலத்தில் தனது நிறம் இல்லை என்பதாலும், தந்தையின் சாயல் இல்லை என்பதாலும் குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம்: கேரள மாநிலத்தில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு தனது நிறமும், தந்தையின் சாயலும் இல்லாததால் அதன் கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
கோட்டயம் முறிகாட்டுக்குடி அருகே உள்ள கட்டபனாவில் வசித்து வருபவர் கண்டதின்கார பினு. இவரது மனைவி சந்தியா (28).
இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்தது
இந்நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

தந்தையின் சாயல் இல்லை
பிறந்த குழந்தை தனது நிறம் இல்லை என்பதாலும், கணவரின் சாயல் இல்லாததாலும் சந்தியா கவலையில் உள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையை கழுத்தை துணியை கொண்டு நெரித்து கொன்றுவிட்டார்.

கணவரிடம் அழுகை
பின்னர் கணவர் பினு வீட்டுக்கு வந்தவுடன் குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் உள்ளது என்று கூறி அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர்.

போலீஸ் விசாரணை
அப்போது குழந்தையை சோதனை செய்த மருத்துவர், அதன் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டார். பின்னர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சந்தியா மீது சந்தேகம் அடைந்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications