For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்த ஆண் அதிக சுகம் கொடுத்தார்..? கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் கேரள போலீஸ் அநாகரீக கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:கேரளாவில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணை முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆண் உங்களுக்கு அதிக சுகம் கொடுத்தார் என்று போலீசார் கேட்ட கேள்வியால் அப்பெண்ணும், கணவரும் கதறியுள்ளனர்.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் 35 வயதாகும் நீத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சில மாதங்கள் முன்பு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த அவருடைய நண்பர்கள் நால்வர் காரில் நீத்துவை கூட்டிச் சென்று ஊருக்கு வெளியே வைத்து மாற்றி மாற்றி பலாத்காரம் செய்துள்ளனர்.

Kerala police ask gang rape victim, ‘who pleasured you the most’

3 மாதங்கள் பிறகே இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார் நீத்து. இதையடுத்து தனது நண்பர்களுக்கு எதிராக நீத்துவின் கணவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு வரவழைத்த போலீசார், அந்த பெண்ணிடம் கேவலமான கேள்விகளை எழுப்பி அவமானப்படுத்தியுள்ளனர்.

உங்களை, நான்கு பேர் பலாத்காரம் செய்ததாக கூறுகிறீர்கள் அல்லவா, அதில் எந்த நபர் உங்களை பலாத்காரம் செய்தபோது, உங்களுக்கு அதிகமான சுகம் கிடைத்தது என்று ஒரு கேள்வியை போலீஸ்காரர் ஒருவர் முன் வைத்தபோது, நீத்து நொடிந்து அழுதுவிட்டாராம். கணவரும் தேம்பி தேம்பி அழுதுள்ளார். இவ்விவகாரத்தை மலையாள திரை பிரபலம் பாக்யலட்சுமி தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு வெளிஉலகிற்கு கொண்டு வந்துள்ளார்.

பாக்யலட்சுமி வெளியிட்ட தகவலானது பலரால் பகிரப்பட்டு உள்ளது. மாநில முதல்வர் அலுவலகமே இதில் தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. நீத்து மற்றும் அவருடைய கணவர் முகத்தை மூடிக்கொண்டு நிருபர்களிடம் கூறுகையில், "போலீஸ் வழக்கு எனக்கு வேண்டாம், நாங்கள் போலீசால் அவமானப்படுத்தப்பட்டோம். பாலியல் பலாத்காரத்தை விட, போலீசாரின் கேள்விகள் அதிக அவமானம் தருகிறது" என அவர் கூறியுள்ளார்.

"உனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று நீத்துவை பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்து சென்று உள்ளனர். அவரும் நம்பி சென்றுள்ளார். திருச்சூர் நகரின் வெளியே காரை நிறுத்தி வைத்து, கணவரின் நண்பர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்கார குற்றவாளிகளில் ஒருவர், அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பில் உள்ளார். இதுதான் போலீசாரின் பின்வாங்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

English summary
A gang rape victim in Kerala had to take back her complaint to state police against the accused after the cops shamed her. This information was shared on Facebook by popular dubbing artist Bhagyalakshmi. She wrote in Malayalam that the one of the policemen asked the gangrape victim: "who among the rapists pleasured you the most".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X