சிறையில் மரணம் அடைந்த கைதி.. 2 போலீஸுக்கு தூக்கு தண்டனை.. திருவனந்தபுரம் சிபிஐ கோர்ட் அதிரடி
கேரளாவில் சிறையில் மரணம் அடைந்த சிவக்குமார் என்பவரின் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறையில் மரணம் அடைந்த சிவக்குமார் என்பவரின் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தியாவில் சிறை மரணம் இப்போது அதிகமாகிவிட்டது. சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லப்பட்டு குற்றவாளிகள், முன்னாள் குற்றவாளிகள், நிரபராதிகள் சிலர் போலீசால் அடித்து கொலை செய்யப்படும் அவலம் நடக்கிறது. அப்படி ஒரு வழக்கில் இன்று சிறப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 செப்டம்பர் 25ம் தேதி சிவக்குமார் என்ற நபர் 2000 ரூபாய் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக திருவனந்தபுரம் போர்ட் காவல்நிலையத்திற்கு போலீசால் அழைத்து செல்லப்பட்டார். வெறுமனே விசாரணைக்கு என்று அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

சில வழக்கு
சிவக்குமார் மீது ஏற்கனவே சில வழக்கு இருப்பதால் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில், அன்று இரவு போலீஸ் அவரை அடித்ததில் அவர் பலியாகி உள்ளார். அப்போது அவருக்கு வெறும் 26 வயது மட்டும் ஆகியுள்ளது. வெறும் 2000 ரூபாய்க்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சிபிஐ வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்கு தொடுக்கப்பட்டது. சிபிஐ விசாரித்த இந்த வழக்கின் விசாரணை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவரது உடல் பிரதே பரிசோதனை மூலம் அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை வருடம் நடந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ன தண்டனை
அதன்படி கான்ஸ்டபிள் கே ஜித்தகுமார், எஸ்வி ஸ்ரீகுமார் ஆகியோருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் துணை கமிஷனர் டிகே ஹரிதாஸ், இன்ஸ்பெக்டர் இகே சாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித் குமார் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய் போராட்டம்
ஆதாரங்களை அழிக்க முயன்றதால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் முதல்முறை இப்படி ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, 13 வருடம் இதற்காக சிவக்குமாரின் 68 வயது நிரம்பிய தாய் பிரபாவதி போராடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications