கேரளாவில் அதிகரிக்கும் "பேய் வீடுகள்.." வாங்க ஆளில்லாமல் கிடக்கும் நிலங்கள்.. அள்ளிப்போட சான்ஸ்
கொச்சி: கேரளா ஒரு நூதன பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. கடவுளின் தேசம் என்று தங்களுக்கு தாங்களே பெயர் சூட்டி மற்றவர்களின் மத்தியில், பெருமை காட்டிக் கொண்ட, கேரள மக்களின் வீடுகள் இப்போது பேய் வீடுகளாக (Ghost House) காட்சியளிக்கின்றன. அவர்களின் நிலங்களை வாங்குவதற்கும் ஆளில்லை. அடிமாட்டு விலைக்கு கூவி கூவி பார்த்தாலும் கொள்வார் இல்லை.
உதாரணத்திற்கு ஜார்ஜ்குட்டி கதையை பார்ப்போம். 2000களின் தொடக்கத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இப்போது அவர் மற்ற வெளிநாடுவாழ் மலையாளிகளைப் போலவே ஒரு பிரச்சினையை சந்திக்கிறார்.

அது வேறு ஒன்றுமில்லை, கேரளாவில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பதில் ஏற்படும் கஷ்டம்தான் அது. ஜார்ஜ்குட்டிக்கு கேரளாவின் போன்குன்னம் பகுதியில் அரை ஏக்கர் நிலம் உள்ளது. அவரது பிள்ளைகள் அமெரிக்காவில் நல்ல வேலைகளில் உள்ளனர். கேரளாவில் உள்ள நிலத்தை பற்றி அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. இதனால் நிலத்தை விற்கலாம் என்று ஆட்களை தேடினால் வாங்க யாரும் முன்வரவில்லை.
மலையாளிகள் நாடுவிட்டு நாடு சென்று வாழ்வதில் பலே நபர்கள். 2000களின் தொடக்கத்தில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த பல மலையாளிகள் அங்கேயே நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், கேரளாவில் உள்ள தங்கள் நிலங்களை விற்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். சமீப காலமாக வெளிநாடு போன மலையாளிகள் இன்னும் விற்பனைக்கு தேடவில்லை. ஆனால் வருங்காலத்தில் அவர்களுக்கும் இதுதான் நிலைமையாக இருக்கப்போகிறது.
ரப்பர் விலைகள் வீழ்ச்சியடைந்ததால், நில விலைகளும் கடுமையாக குறைந்துள்ளன என்பதுதான் இதற்கான அடிப்படை காரணம். இதன் காரணமாக, வெளிநாட்டில் குடியேறிய மலையாளிகள் தங்கள் நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.
நிலம் விலை வீழ்ச்சி
2010-11ல் ரப்பர் விலை உச்சத்தில் இருந்தபோது, ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தின் விலை ரூ. 1 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ. 40-45 லட்சமாக குறைந்துள்ளது. கிராமப்புற பாதை உள்ள நிலங்களின் விலை ரூ. 50-60 லட்சத்தில் இருந்து ரூ. 25-30 லட்சமாக குறைந்துள்ளது.இந்த விலையில் கூட வாங்குபவர்கள் கிடைப்பது கடினம்.
குத்தகை விவசாயம்
கேரளாவின் மத்திய பகுதிகளான கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் இந்த நிலைமை அதிகம் காணப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தின் கூத்தட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.சி. சாஜு "வரும் ஆண்டுகளில் விற்கப்படாத நிலங்கள் குத்தகை விவசாயத்திற்கு மிக அதிக அளவில் வரும்" என்கிறார் உறுதியாக. கோத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சோனி டி.கே. என்பவர் 500 ஏக்கர் நிலத்தில் அன்னாசி பயிரிடுகிறார். அவர் கஞ்சிரப்பள்ளியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தையும் குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகைக்கு ஈஸியாக நிலம் கிடைப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
எதிர்காலம்
திருவனந்தபுரத்தில் உள்ள International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப், "மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அடிமாட்டு விலையில் விற்கும் நிலை ஏற்படும். கேரளாவின் சமூக-பொருளாதார சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்" என்கிறார். மத்திய கேரளாவில் ஏற்கனவே பல "பேய் வீடுகள்" (காலியாக உள்ள கைவிடப்பட்ட வீடுகள்) உள்ளன, அவை விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறுகிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இது தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications