சாவிக்கு வெய்ட் பண்ண முடியாது.. மருத்துவமனை சுவற்றை தாண்டி குதித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி!
புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து கிரண்பேடியின் அதிரடிகள் தொடருகின்றன. புதுச்சேரியில் இரவு நேரத்தில் சைக்கிளில் பயணித்து, பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை கண்காணித்து பரபரப்பை ஏற்படுத்தியிர
புதுச்சேரி: மருத்துவமனை சுவற்றை தாண்டி குதித்து மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தியுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
காரைக்காலில் ஒரு வாரம் முகாமிட்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அங்கிருந்தபடி நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தும், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுட்டும் வருகிறார்.
முகாமின் 4ஆம் நாளான நேற்று ஆட்சியரகத்தில் அரசு பொதுமருத்துவமனை மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவமனை விசிட்
முன்னதாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு நேரடி விசிட் செய்ய கிரண்பேடி சென்றார். டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகம் தூய்மையாக உள்ளதா என்பதை சோதித்து பார்க்கவே கிரண்பேடி சென்றார்.

சாவியை மறந்த ஊழியர்க்ள்
அவருடன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன், போலீஸ் எஸ்.பி சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர். மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள அவர் லேடி ஆப் லவுடர்ஸ் சிலை அருகே செல்ல கிரண்பேடி விரும்பினார். சிலையை சுற்றி செங்கல் சுவர் எழுப்பப்பட்டு, கேட் போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை ஊழியர்களோ, அந்த கேட் சாவியை மறந்துவிட்டனர்.

சுவற்றை தாண்டிய கிரண்பேடி
ஊழியர்கள் சாவியை தேடுவதில் தாமதம் செய்துவிடவே பொறுமை இழந்த, கிரண் பேடி, மூன்றடை அடி உயர சுவற்றை திடீரென தாண்டி குதித்து உள்ளே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்து அதிகாரிகள் திகைத்தனர். ஆனால் ஆளுநர் செல்லும்போது உடனிருக்க வேண்டும் என்பதால் கலெக்டரும், எஸ்.பியும் பிற போலீசாரும் சுவற்றை தாண்டி செல்ல வேண்டியதாயிற்று.

அதிரடி ஆளுநர்
68 வயதாகும் கிரண்பேடிதான், இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாகும். திகார் சிறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர். பாஜகவை சேர்ந்த இவர் புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அதிரடிகள் தொடருகின்றன. சமீபத்தில் புதுச்சேரியில் இரவு நேரத்தில் சைக்கிளில் பயணித்து, இரவு நேர பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை கண்காணித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கிரண் பேடி.












Click it and Unblock the Notifications