"பணத்தை அள்ளி கொடுத்த போலீஸ்.." கொல்கத்தா மருத்துவர் கொலை.. பெற்றோர் அதிர வைக்கும் தகவல்! பகீர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 31 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், போலீசார் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகப் பரபர குற்றச்சாட்டுகளை மருத்துவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆக. மாதம் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனையிலேயே இந்த பகீர் சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் முழுக்க தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாகக் கொல்கத்தா போலீசாருக்கு முதுகெலும்பைப் பரிசாகத் தந்தும் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டங்கள்: இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் சில பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா போலீசார் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவே முதலில் முயன்றதாகக் கூறியுள்ளனர். கொல்கத்தா மருத்துவர் கொலையைக் கண்டித்து அங்குத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அப்படி நடந்த போராட்டம் ஒன்றில் அந்த மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் முழுமையாக விசாரிக்காமல் முடிக்கவே முயன்றதாகக் குற்றஞ்சாட்டினர்.
லஞ்சம் தந்த போலீஸ்: இது குறித்து அந்த மருத்துவரின் தந்தை கூறுகையில், "கொல்கத்தா போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடிமறைக்கவே முயன்றனர்.. உடலைப் பார்க்க எங்களை அவர்கள் அனுமதிக்கவே இல்லை. பல மணி நேரம் போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்தனர். உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் முன்பு எங்களை அனுமதிக்காமல் காத்திருக்கச் சொன்னார்கள்.
உடலை எங்களிடம் ஒப்படைத்தபோது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார். ஆனால், நாங்கள் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். எங்கள் மகளின் கொலைக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை ஆதரிக்கும் விதமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.
சிபிஐ விசாரணை: இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாக அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தே வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட் வழக்கு சிபிஐ விசாரணையை மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் ராயால் எப்படி அரசு நடத்தும் மருத்துவமனையின் எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று வர முடிந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சஞ்சய் மருத்துவமனையில் படுக்கைகளை ரெடி செய்து தருவது உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி மக்களிடம் பணம் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
பரபரப்பு: இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டை விதிக்கும் வகையிலான மசோதாவை அம்மாநில அரசும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றே போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications