எல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி!

சிக்கிம் எல்லை பதற்றத்தை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சிலிகுரி: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைத்து நாட்டுக்கு எதிராக யுத்தம் நடத்துமாறு தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அமிர் ஹம்சா அழைப்பு விடுத்துள்ள ரகசிய வீடியோ அம்பலமாகியுள்ளது.

பூடானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை நமது ராணுவம் தடுத்துள்ளது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Lashkar's deadly plan for North-East revealed

இதனிடையே மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் தீவிரவாதியும் லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதியுமான அமிர் ஹம்சா பேசிய ரகசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் ஜூலை 19-ந் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோ. டோக்லாம் பிரச்சனையை முன்வைத்து நாட்டுக்கு எதிராக சிக்கிம், பூட்டான் மற்றும் டார்ஜிலிங்கில் யுத்தம் நடத்துங்கள் என தீவிரவாதிகளுக்கு அதில் ஹம்சா உத்தரவிட்டு பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக நாம் வடகிழக்கின் 7 மாநிலங்களில் யுத்தம் நடத்துவோம். ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் இயக்கத்துடன் இணைந்து இந்த யுத்தத்தை நடத்துவோம் என ஹம்சா மிரட்டல் விடுத்திருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+