”என் மகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்”– லியாண்டர் பயஸ் கோர்ட்டில் மனு
மும்பை: இந்திய டென்னிஸ் சாதனையாளர் லியாண்டர் பயசும், பிரபல மாடல் அழகி ரியா பிள்ளையும் காதலித்து வாழ்க்கையில் இணைந்து தம்பதியாய் வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு அயனா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீப காலமாக பயசுக்கும், ரியா பிள்ளைக்கும் இடையே சுமூக உறவு இல்லை.
கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தையை யார் பராமரிப்பது என்பதிலும் பிரச்சனை உருவாகியுள்ளது. இந்நிலையில் லியாண்டர் பயஸ் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

குழந்தையின் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் கருதி குழந்தை அயனாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும், கோர்ட்டின் உத்தரவு இல்லாமல் ரியா பிள்ளை மும்பைக்கு வெளியே குழந்தையை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று மனுவில் லியாண்டர் பயஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக மும்பை போலீசிலும் லியாண்டர் பயஸ் புகார் கொடுத்துள்ளார். அதில் 8 வயதான மகள் அயனாவை, ரியா பிள்ளை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று விடலாம் என்று பயப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. ரியா பிள்ளை, நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications