பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூ கூட்டணியில் இருந்து விலகுவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் மட்டுமே கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான் அரசுக்குத்தான் ஆதரவு தருவோம் என்றும் லோக் ஜனசக்தி தெரிவித்துள்ளது.
பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது.

நிதிஷ் மீது அதிருப்தி
பாஜக-ஜேடியூ அணியில் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாரை மிக கடுமையாக லோக் ஜனசக்தி விமர்சித்து வந்தது.

பாஸ்வான் கட்சி ஆலோசனை
இதனால் பாஜக-ஜேடியூ கூட்டணியில் லோக் ஜனசக்தி இடம்பெறுமா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பீகார் தேர்தல் கூட்டணி தொடர்பாக லோக் ஜனசக்தி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் நிதிஷ்குமார் மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜேடியுடன் கூட்டணி சேரவில்லை
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் காலிக் கூறியதாவது; ஜேடியூவுக்கும் எங்களுக்கும் தத்துவார்த்த சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் ஜேடியூவுடனான கூட்டணியில் இருந்து பீகார் தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை.

பாஜகவுடன் கூட்டணி
ஆனால் பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். பீகார் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க லோக் ஜனசக்தி உதவும் . இவ்வாறு அப்துல் காலிக் கூறினார்.












Click it and Unblock the Notifications