Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியா? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் அதுதொடர்பாக மவுனம் கலைத்து விளக்கம் அளித்துள்ள நிலையில் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து எம்பி, எம்எல்ஏக்கள் ஆகி வருகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் வீரர் சித்து பாஜகவில் எம்பியாக இருந்தார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்து அமைச்சராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டார்.

Lok sabha Election 2024: Im not contesting from Gurdaspur, Says former Indian Cricketer yuvraj Singh

அதேபோல் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மேலும் முன்னாள் இந்திய வீரரரான சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆம்ஆத்மி சார்பில் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேன்னுமான யுவராஜ் சிங் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். பஞ்சாப்பை சேர்ந்த யுவராஜ் சிங் தற்போது சண்டிகரில் வசித்து வருகிறார். அவர் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் யுவராஜ் சிங் தரப்பில் இருந்து உண்மை அல்லது பொய் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அவர் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதும், அவர் மூலம் தான் பாஜகவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தான் பாஜகவில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல் பற்றி யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ‛‛ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது. பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன்'' என தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற முறையில் யுவராஜ் சிங் என்பவர் அனைவருக்கும் பிடித்த நபராக இருக்கிறார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு கட்சியில் அவர் இணைந்தால் மாற்று கட்சியில் இருப்பவர் வருத்தமடையலாம். இதனை தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உலககோப்பை ஹீரோவான உங்களின் முடிவு வரவேற்கத்தக்கது என அவரது எக்ஸ் பதிவுக்கு கீழ் ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+