நெருங்கவே முடியாது.. மத்திய பிரதேசத்தில் இனி காங்கிரஸ் ஆட்சி தான்.. காலியாகும் பாஜக -கருத்து கணிப்பு
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் முதலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தாலும் கூட ஜோதிர்ஆதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் தாமரை மலர்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காங்கிரஸை தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் மத்திய பிரதேச தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனவும், எந்த கட்சியை ஆட்சியில் அமைத்தாலும் நூலிழை அளவில் தான் எம்எல்ஏக்களின் வித்தியாசம் என்பது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் LokPoll சார்பில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 72,405 பேரிடம் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவு என்பது தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும், காங்கிரசுக்கு உற்சாகம் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அதாவது மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத ஓட்டுகளை பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக 39 முதல் 41 சதவீத ஓட்டுக்களுடன் 84 முதல் 98 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் 8 முதல் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளை கைப்பற்றலாம் என இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications