Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கவே முடியாது.. மத்திய பிரதேசத்தில் இனி காங்கிரஸ் ஆட்சி தான்.. காலியாகும் பாஜக -கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

Lokpoll opinion poll says BJP will lost power and Congress may form government in Madhya Pradesh

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் நீண்டகாலமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் முதலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தாலும் கூட ஜோதிர்ஆதித்ய சிந்தியா விலகி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் தாமரை மலர்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காங்கிரஸை தோற்கடித்து மீண்டும் அதிகாரத்தை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் மத்திய பிரதேச தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனவும், எந்த கட்சியை ஆட்சியில் அமைத்தாலும் நூலிழை அளவில் தான் எம்எல்ஏக்களின் வித்தியாசம் என்பது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் LokPoll சார்பில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 72,405 பேரிடம் இந்த கருத்து கணிப்பு என்பது மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் முடிவு என்பது தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலும், காங்கிரசுக்கு உற்சாகம் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அதாவது மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 45 முதல் 47 சதவீத ஓட்டுகளை பெற்று 130 முதல் 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக பாஜக 39 முதல் 41 சதவீத ஓட்டுக்களுடன் 84 முதல் 98 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் 8 முதல் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளை கைப்பற்றலாம் என இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+