காதலுக்கு எல்லை கிடையாது.. அனைத்துமே லவ் ஜிஹாத் அல்ல: கேரளா ஹைகோர்ட் அதிரடி
காதலுக்கு எல்லை எதுவும் கிடையாது; அனைத்தையுமே லவ் ஜிஹாத்தாக பார்க்கவும் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: காதலுக்கு எல்லை என்பதே கிடையாது.. அனைத்து காதலுமே லவ் ஜிஹாத் அல்ல அதிரடியாக கூறியுள்ளது கேரளா உயர்நீதிமன்றம்.
கண்ணூரைச் சேர்ந்த அனீஸ் ஹமீத் என்பவரும் ஸ்ருதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஸ்ருதியின் பெற்றோரோ, அனீஸ் கடத்திச் சென்று அவரை மதம் மாற்றியதாக போலீசில் புகார்கொடுத்தனர்.
அதேநேரத்தில் மனைவி ஸ்ருதியை அவரது குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டுத் தரக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை அனீஸ் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சிதம்பரேஸ் மற்றும் சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மதம் மாற வற்புறுத்தவில்லை
அப்போது விசாரணைக்கு அனீஸ், ஸ்ருதி இருவருமே ஆஜராகினர். இந்த விசாரணையின் போது ஸ்ருதி, என்னை மதம் மாற யாரும் வற்புறுத்தவில்லை; அனீஸை திருமணம் செய்யத்தான் மதம் மாறினேன் என கூறினார்.

வன்முறை ஏவ கூடாது
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: கேரளாவில் ஒவ்வொரு காதலையுமே அல்லது கலப்பு திருமணத்தையுமே லவ் ஜிஹாத் என்பதும் கார் வாப்ஸி என்பதுமான ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களும் இளம்பெண்களும் அச்சுறுத்தப்படுவதும் அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படுவதுமான செய்திகள் வருத்தத்தைத் தருகின்றன.

மேஜரானவர்களுக்கு உரிமை உண்டு
கலப்பு திருமணம் செய்வோர் மீது வன்முறையை ஏவுவோர் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு ஒருவர் மேஜராகிவிட்டால் அவர்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

வன்முறை கூடாது
அப்படி கலப்பு திருமணம் செய்து கொள்வதை அந்த பையன் அல்லது பெண்ணின் விரும்பவில்லை எனில் மகன் அல்லது மகளுடனான சமூக உறவை வேண்டுமானால் நீங்கள் துண்டித்துக் கொள்ளலாம். அதற்காக அவர்களை அச்சுறுத்துவதும் வன்முறையை ஏவுவதும் ஏற்க முடியாதது.

காதலுக்கு எல்லைகள் கிடையாது
தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் நாம். சட்டவிரோதமாக ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். காதலுக்கு எல்லைகள் எதுவுமே கிடையாது.. அது அத்தனைகளையும் தடைகளையும் வேலிகளையும் தாண்டி முழுமையாக நம்பிக்கையை உள்ளடக்கியது. இந்த வழக்கில் ஸ்ருதியின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். அவரது பெற்றோரின் தவறான தகவல்களை முறியடித்து உண்மையை நிலைநாட்டியுள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications