அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார்... காந்தியின் பேரன் பதிலடி
புத்திசாலி வணிகர் என்று காந்தியை விமர்சனம் செய்த அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார் என்று காந்தியின் பேரன் தெரிவித்தார்.
ராய்ப்பூர்: புத்திசாலி வணிகர் என்று காந்தியை விமர்சனம் செய்த அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார் என்று காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜத தலைவர் அமித்ஷா நேற்று பேசிய போது காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது காந்தியை புத்திசாலி வணிகர் என்றார். குஜராத்தில் வணிகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை 'பனியா' என்று குறிப்பிடுவார்கள். காந்தியும் பனியா வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் 'சதுர் பனியா' (புத்திசாலி வணிகர்) என்றார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில், ஜாதியத்துக்கு எதிராக போராடாமல், நாட்டின் தேசப்பிதாவை காந்தியை கூட ஜாதி கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதன் மூலம் பாஜகவின் குணம், சித்தாந்தம் வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மகாத்மா காந்தி குறித்து கூறிய அமித்ஷா, தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். தான் கூறியதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், வேண்டுமென்றே தெரிவித்த துரதிருஷ்டவசமான கருத்தாகும் என்றார்.
அமித்ஷாவின் கருத்துக்கு காந்திஜியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி கூறுகையில், எனது தாத்தா காந்தி, அவர் குறித்து விமர்சித்து வரும் கேலிச் சித்திரங்களைக் கண்டு சிரிப்பார். அதுபோல் அமித்ஷாவின் கருத்தை கேட்டிருந்தால் அதன் சுவையில்லாத தன்மை, குறும்புத்தனமான பேச்சு ஆகியவற்றை கண்டு சிரித்திருப்பார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications