போதைப்பொருள் வழக்கில் கொச்சியில் மலையாள நடிகர், 3 மாடல் அழகிகள் கைது
கொச்சி: கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் போலீசில் சிக்கியுள்ளார்.
மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவன்தாரா பகுதியில் இருக்கும் கிங் குழும தலைவரும், தொழில் அதிபருமான முகமது நிஜாமின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சாக்கோ போதைப் பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அந்த வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது போலீசார் 10 கிராம் கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். போலீசார் அந்த வீட்டில் இருந்த சாக்கோ, உதவி இயக்குநர் பிளெஸி, 3 இளம் மாடல் அழகிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் 5 பேரும் இன்று காலை வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த கொகைன் கோவாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் பாதுகாவலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் நிஜாம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications