Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்.. கண்டித்த காதலன்.. மறுத்த காதலி.. உல்லாசத்திற்கு பிறகு கொன்று எரித்த இளைஞர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆண் நண்பர்களுடன் தனது காதலி வீடியோ எடுத்ததால் அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், அந்த பெண்ணை கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதகிரி தாலுக்கா அரகெரேவை சேர்ந்தவர் மாருதி ரதோடு. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

Man kills his girl friend and set on fire for making video with other youths

இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். பென்டலா வெர்மா எப்போதுமே சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. டிக் டாக் போன்ற செயலிகளில் தனது ஆண் நண்பர்களுடன் அவர் வீடியோ எடுத்தும் வந்துள்ளார். டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில் வெவ்வேறு செயலிகளில் அவர் ஆண்களுடன் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் மாருதி ரத்தோடுக்கு தெரியவந்தது. இதையடுத்து "இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஆண்களுடன் நீ நெருக்கமாக வீடியோ எடுத்து போட கூடாது" என பென்டெலாவிடம் மாருதி கறாராக கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Man kills his girl friend and set on fire for making video with other youths

அவர்கள் என் நண்பர்கள், அவர்களுடன் வீடியோ போட கூடாது என எப்படி சொல்லலாம். நீ வருவதற்கு முன்பே அவர்கள் எனக்கு நண்பர்கள் என பென்டெலா, மாருதியிடம் கூறியிருந்தாராம். இதனால் மாருதி ஆத்திரமடைந்தாலும் அந்த பெண்ணிடம் அதை காட்டிக் கொள்ளாமல் ஆசை வார்த்தை கூறி தனது ஊருக்கு அழைத்து சென்றுள்ளார் மாருதி.

அங்கு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போதும் ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுக்கக் கூடாது என மாருதி அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் மீண்டும் கோபமடைந்து மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த மாருதி ரதோடு, பென்டெலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

Man kills his girl friend and set on fire for making video with other youths

இதையடுத்து போலீஸிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரது உடலை தனக்கு சொந்தமான நிலத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து பயத்தின் காரணமாக மாருதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்ததாக தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலியை கொன்றுவிட்டு அச்சத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man kills his girl friend and set on fire for making video with other youths

இதற்கு காரணம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுதல், அதாவது பொசசிவ்னஸ் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொருளோ நபரோ அதன் மீது அளவுக்கு அதிகமான ஆசை, பாசம் வைத்துவிட்டால் அவற்றை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தனக்குதான் தனக்கு மட்டும்தான் சொந்தம் என சிலர் கருதும் போதுதான் நண்பர்களுடன் பழகுவதும் தவறாக தெரிந்து இறுதியில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கின்றன. எப்போதுமே பொசசிவ்னஸ் என்ற ஒன்று இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+