சாக்லேட் ஆசை காட்டி 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்... தெலுங்கானாவில்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மூன்று வயது சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை காட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் தமர்குண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் சாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மூன்றரை வயது சிறுமியை, சம்பவத்தன்று சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், தனிமையான இடத்தில் வைத்து அச்சிறுமியை பலாத்காரம் செய்த வெங்கட், பின்னர் கொலையும் செய்துள்ளார்.
இதற்கிடையே, சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, வெங்கட் வீட்டின் அருகே சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் பெற்றோர் வெங்கட் தான் இந்தக் கொடூரச் செயலை செய்திருக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அந்நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications