சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் அட்டகாசம் - 5 சுரங்க அதிகாரிகள் கடத்தி பின் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தனியார் சுரங்க அதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகளை தீவிரவாத கும்பலான மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றனர்.

இக்கடத்தல் குறித்து போலீஸ் தரப்பில், "மாநிலத்தின் சிக்சோடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட தனியார் சுரங்கத்தில்பணிபுரிந்து வந்த ஐந்து அதிகாரிகளை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கடத்தி சென்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடத்தப்பட்ட ஐந்து அதிகாரிகளில் ஒருவர் மட்டும் விடுவிக்கப் பட்டுள்ளார் என போலீஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங்மீனா தெரிவித்த நிலையில், மாலையில் மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாவோயிஸ்ட்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications