தட்கல் டிக்கெட்: 35 வினாடிகளுக்கு பின்னரே இணையத்தில் பதிவு செய்ய முடியும்!
டெல்லி: ரயில்வேயில் தட்கல் டிக்கெட்கள் அனைத்தும் இணையம் வழியாக பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல் 35 வினாடிகளுக்குப் பின்னரே இணையம் வழியாக பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மனோசா கூறியதாவது:

ரயில்வேயில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலமே பதிவு செய்யப்படுவதால், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையல்ல.
முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கிய 35வது வினாடிக்குப் பின்னரே ஐஆர்டிசி இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் கணினியில் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை இணையவழி டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications