மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா.. தேர்தலில் போட்டியிட முடிவு!
மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஐசாவல்: மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து தன்னுடைய அரசியல் பணிகளை தொடங்கியவர் கும்மனம் ராஜசேகரன். இவர் பூர்வீகமும் கேரளா. அதன்பின் இவர் பாஜகவில் இணைந்தார்.
2015-2018 வரை இவர் கேரள மாநில பாஜக தலைவராக இருந்திருக்கிறார். அதன்பின் இவர் மிசோரம் கவர்னராக 2018ல் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஜசேகரன் ராஜினாமாவை ஏற்று கொண்டார்
1000 பெரியார் வந்தாலும் இந்த திராவிட + தேசிய கட்சிகளை திருத்த முடியாது போலயே!
அங்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அசாம் ஆளுநராக இருக்கும் பேராசிரியர் ஜக்தீஷ் மக்கிக்கு மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வழங்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தல் வருவதை அடுத்து, கும்மனம் ராஜசேகரனை பாஜக தேர்தல் பணிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து நிற்கவும் வாய்ப்புள்ளது. அதற்காக அவர் ராஜினாமா செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.