Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் முடிந்த கையோடு.. வெளுத்து எடுக்கும் கனமழை.. ஸ்தம்பித்த மிசோரம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இப்போது தான் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கே கையோடு கனமழையும் வைத்துச் செய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாகக் கடந்த நவ. 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கே மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என்று மும்முனை போட்டி நிலவுகிறது.

 Mizoram is affected by heavy rain immediately following to election

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில்- தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறவே அனைத்து அரசியல் கட்சிகளும் முயல்கின்றன. இதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.

மிசோரம் தேர்தல்: மிசோரத்தைப் பொறுத்தவரை அங்கே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், வரும் டிச.3ஆம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கே இப்போது தான் தேர்தல் முடிந்த நிலையில், கையோடு மிசோரம் மாநிலத்தை மழையும் வைத்துச் செய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் அங்கே கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மிசோரம் அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

முடங்கிய பொதுமக்கள்: அங்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், மிசோரம் தலைநகர் ஐஸ்வால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கே சாலைகளில் சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன.

கனமழை காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மழையால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் சம்பை (52 மிமீ), கோலாசிப் (58 மிமீ), லாங்ட்லாய் (52 மிமீ) மற்றும் மாமித் (56 மிமீ) கனமழை பெய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+