தேர்தல் முடிந்த கையோடு.. வெளுத்து எடுக்கும் கனமழை.. ஸ்தம்பித்த மிசோரம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இப்போது தான் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கே கையோடு கனமழையும் வைத்துச் செய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாகக் கடந்த நவ. 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கே மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என்று மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில்- தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறவே அனைத்து அரசியல் கட்சிகளும் முயல்கின்றன. இதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.
மிசோரம் தேர்தல்: மிசோரத்தைப் பொறுத்தவரை அங்கே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், வரும் டிச.3ஆம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கே இப்போது தான் தேர்தல் முடிந்த நிலையில், கையோடு மிசோரம் மாநிலத்தை மழையும் வைத்துச் செய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் அங்கே கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மிசோரம் அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
முடங்கிய பொதுமக்கள்: அங்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், மிசோரம் தலைநகர் ஐஸ்வால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கே சாலைகளில் சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன.
கனமழை காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மழையால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் சம்பை (52 மிமீ), கோலாசிப் (58 மிமீ), லாங்ட்லாய் (52 மிமீ) மற்றும் மாமித் (56 மிமீ) கனமழை பெய்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications