தேர்தல் முடிந்த கையோடு.. வெளுத்து எடுக்கும் கனமழை.. ஸ்தம்பித்த மிசோரம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இப்போது தான் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கே கையோடு கனமழையும் வைத்துச் செய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாகக் கடந்த நவ. 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கே மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என்று மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில்- தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறவே அனைத்து அரசியல் கட்சிகளும் முயல்கின்றன. இதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.
மிசோரம் தேர்தல்: மிசோரத்தைப் பொறுத்தவரை அங்கே வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், வரும் டிச.3ஆம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கே இப்போது தான் தேர்தல் முடிந்த நிலையில், கையோடு மிசோரம் மாநிலத்தை மழையும் வைத்துச் செய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் அங்கே கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மிசோரம் அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
முடங்கிய பொதுமக்கள்: அங்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், மிசோரம் தலைநகர் ஐஸ்வால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அங்கே சாலைகளில் சில வாகனங்கள் மட்டுமே காணப்பட்டன.
கனமழை காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மழையால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் சம்பை (52 மிமீ), கோலாசிப் (58 மிமீ), லாங்ட்லாய் (52 மிமீ) மற்றும் மாமித் (56 மிமீ) கனமழை பெய்துள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications